tamilnadu

img

நிஜ துப்பாக்கி வெடித்து தீபாவளி கொண்டாடிய தொழிலதிபர் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

உத்தரபிரதேச மாநிலத்தில் நிஜ துப்பாக்கியை வெடித்து தொழிலதிபர் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிவருகிறது. 
உத்தரபிரதேச மாநிலம் பாரேல் இசாத் நகரைச்சேர்ந்த அஜய் மேத்தா என்ற தொழிலதிபர் அவரது குடும்பத்துடன் நிஜ துப்பாக்கியை வெடிக்கச் செய்து தீபாவளியை கொண்டாடி உள்ளார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய அந்த வீடியோவில், தொழிலதிபரின் மனைவி நிஜ துப்பாக்கியை வைத்து வானத்தை நோக்கி சுடுகிறார். அவருடன் அவரது குழந்தைகளும் உடன் இருக்கின்றனர். இதேபோன்ற மற்றொரு வீடியோவில், தொழிலதிபர் வானத்தை நோக்கி சுடுகிறார்.  இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியான பிறகே போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணையை துவக்கியுள்ளனர். எனினும், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தாங்கள் பொம்மை துப்பாக்கி தான் பயன்படுத்தியதாக அந்த குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 
 அந்த துப்பாக்கிகள் லைசன்ஸ் வாங்கிய துப்பாக்கிகள் என்று தெரியவந்தாலும், அதன் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

;